Advertisement

After 5 years, Kurichi Koothandavar strolled through Thiruveedi!

5 ஆண்டுகளுக்கு பின் திருவீதி உலா வந்த குறிச்சி கூத்தாண்டவர்!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 200 ஆண்டு பழமையான குறிச்சி கூத்தாண்டவர் சாமி 'தலை', 5 ஆண்டுகளுக்குப் பிறகு திருவீதி உலா வந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

 

மழை கொட்டித் தீர்த்ததால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குறிச்சி கிராமத்தில், 200 ஆண்டு பழமையான கூத்தாண்டவர் திருக்கோயில் அமைந்துள்ளது.

 

இக்கோயிலில், சக்தி வாய்ந்த தெய்வமாக கருதப்படும், சுற்றுப்புற கிராம மக்களின் காவல் தெய்வமான கூத்தாண்டவரின் அத்தி மரத்தால் செய்யப்பட்ட பிரமாண்டமான 'தலை' உருவம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் சாமிக்கு முழு உருவ சிலை சிற்பம் இல்லை.

 

இந்த கூத்தாண்டவர் கோயிலுக்குச் சென்று சாமியின் தலையை பக்தர்கள் வழிபடுவதில்லை. பூசாரி மட்டுமே மாதத்திற்கு ஒரு முறை கோயிலுக்கு சென்று கூத்தாண்டவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வருகிறார்.  

குறிச்சி கிராம மக்கள் ஒன்று கூடி, கூத்தாண்டவருக்கு திருவிழா எடுக்கும் தருணத்தில், கூத்தாண்டவர் சாமி புஷ்ப ரதத்தில் திருவீதி விழா வரும்போது தான், ஸ்வாமியின் தலையை பக்தர்கள் வணங்கி வழிபாடு செய்ய முடியும்.

 

5 ஆண்டுகளுக்குப் பிறகு, வியாழக்கிழமை குறிச்சி கூத்தாண்டவர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. கோயிலிலிருந்து கூத்தாண்டவர் ஸ்வாமி 'தலை' திருவீதி உலா வருகை எதிர்பார்த்து, சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குறிச்சி கிராம வீதிகளில் காத்திருந்தனர். 5 ஆண்டுகளுக்குப் பிறகு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப ரதத்தில் திருவீதி உலா வந்த கூத்தாண்டவர் ஸ்வாமியின் பிரமாண்டமான தலையை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயபக்தியோடு வழிபாடு நடத்தினர்.

 

கூத்தாண்டவர் திருவீதி உலா உற்சவம் நிறைவடைந்து, சிலையை கோயிலில் மீண்டும் இறக்கி வைத்ததும், குறிச்சி கிராமத்தில் திடீரென பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால், குறிச்சி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும், பக்தர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

இது குறிச்சி கிராமத்தை சேர்ந்த சண்முகம், வாழப்பாடி அம்சா ஆகியோர் கூறியதாவது:

 

குருச்சி கிராமத்தில் இப்பகுதி மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கி வரும் 200 ஆண்டு பழமையான கூத்தாண்டவர் சாமி திருக்கோயில் உள்ளது.

 

இக்கோயிலில் அத்தி மரத்தால் செய்யப்பட்ட கூத்தாண்டவர் சாமி தலையை வைத்து பாதுகாத்து வருகிறோம். சக்தி வாய்ந்த தெய்வமான கூத்தாண்டவரை, திருவிழா உற்சவத்தின் போது தான் பக்தர்கள் வழிபாடு செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

 

மற்ற நாள்களில் கோயிலுக்கு சென்று கூத்தாண்டவரை வழிபடுவதில்லை. 5 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற திருவிழாவில் திருவீதி உலா வந்த கூத்தாண்டவரை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி நின்று வழிபாடு செய்தனர். 

திருவீதி உலா உற்சவம் நிறைவடைந்து, சாமி கோவிலுக்குள் சென்றதும், எதிர்பாராத விதமாக மழை கொட்டி தீர்த்ததால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இனி வரும் காலங்களில், ஆண்டு தோறும் கூத்தாண்டவர் திருவிழா நடத்திட, கிராம மக்கள் ஒன்றிணைந்து திட்டமிட்டுள்ளோம்' என்றனர்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇

“GST: Not a tax… a waybust!”

“ஜிஎஸ்டி: வரி அல்ல… வழிப்பறி!” - முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.

ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.

1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Suspension of nomination of many important candidates!

பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனு நிறுத்திவைப்பு! கடும் வாக்குவாதம்..

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024:  தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Gold price touched Rs.50 thousand per pound

தங்கம் விலை ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையாகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Panguni festival starts with flag hoisting at Oppiliyappan temple

ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருநாகேஸ்வரம் அருகே அமைந்துள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனிப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST | PREV   ( Page 1 of 15332 )   NEXT |  LAST