மத்திய பிரதேச மாநிலம் சாட்னா மாவட்டம் உள்ள மைஹார் அடுத்துள்ள கிராமத்தில் வசித்து வந்த 12 வயது சிறுமி திடீரென காணவில்லை. நீண்ட நேரமாகியும் மகள் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, சிறுமி மாயமானது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், அவரது வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியிடம் விசாரணை நடத்திய போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. சிறுமி கதற கதற முரட்டுதனமாக பலாத்காரம் செய்யப்பட்டு வெறி தீராததால் உடல் முழுவதும் கடிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. சிறுமியின் அந்தரங்க உறுப்பில் கடுமையான காயங்கள் இருப்பதும் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக ரவீந்திர குமார் ரவி மற்றும் அதுல் படோலியா என இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் ஒருவர் அருகில் உள்ள பிரபல கோவிலுக்கு சொந்தமான பசு காப்பகத்தில் வேலை பார்த்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.