சென்னை: சிபிஎஸ்இ மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலேயே பள்ளிக்கல்வித் துறை வெளியிடும் ஆண்டு நாட்காட்டியில் இடம்பெற்றிருக்கும்.
அந்த வகையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் 18-ம் தேதியும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.8-ம் தேதியும் பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு எப்போது என்ற எதிர்பார்ப்பு அந்த தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் இருந்து வந்தது. இந்நிலையில், பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பை சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு பிப்.15 முதல் மார்ச் 21-ம் தேதி வரையும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்.17 முதல் ஏப்.10-ம்தேதி வரையும் பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது.
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.