செல்போன் செயலி மூலம் மின் கட்டண கணக்கீடு: சோதனை முறையில் தொடங்க உத்தரவு!
செல்போன் செயலி மூலம் மின் கட்டண கணக்கீடு செய்ய மின்சார வாரியம் உத்தரவிட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது வீடுகளில் மற்றும் அலுவலகங்களில் மின் கட்டணம் கணக்கீடு நேரடியாக மின்வாரிய ஊழியர்கள் வந்து கணக்கிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன என்பதும் ஊரடங்கு நேரத்தில் மற்றும் இயற்கை பேரிடர் நேரத்தில் மின் கட்டணம் கணக்கீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் செல்போன் செயலி மூலம் மின்கட்டணம் கணக்கீடு வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் சோதனை முறையில் தொடங்க தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது
மேலும் மின் வாரியத்தின் பல்வேறு சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் மின்வாரிய உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.