கல்லூரி செமஸ்டர் தேர்வில் காப்பியடித்து மாட்டிக் கொண்டதால், மன அழுத்தத்தில் கல்லூரியின் 11வது மாடியில் இருந்து கீழே குதித்து மாணவன் தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, அசோக் நகரைச் சேர்ந்தவர் ரகுராமன். இவரது மகன் கோகுல்ராம் (19) பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 2ம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். இந்நிலையில், நேற்று கல்லூரியில் நடைப்பெற்ற சாப்ட்வேர் இன்ஜினியரிங் தேர்வில் கோகுல்ராம் கலந்து கொண்டார். இந்த தேர்வு, கல்லூரியின் 5வது மாடியில் நடத்தப்பட்டது.
அப்போது தனக்கு அருகில் அமர்ந்திருந்த மாணவரைப் பார்த்து கோகுல்ராம், காப்பியடித்து தேர்வு எழுதிய நிலையில், அந்த வகுப்பறையில் தேர்வு கண்காணிப்பாளராக இருந்த பெண் பேராசிரியர் கோகுல்ராமை இது குறித்து கண்டித்துள்ளார். பின்னர், கோகுல்ராமின் தேர்வு விடைத்தாளை வாங்கி கொண்டு, தேர்வு அறையை விட்டு வெளியே அனுப்பியதாகவும், தனது பெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வருமாறும் கூறியதாக தெரிகிறது.
காப்பியடித்து மாட்டிக் கொண்ட அவமானத்தாலும், பெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வர வேண்டும் என்கிற பயத்தினாலும் மனமுடைந்த கோகுல்ராம், கல்லூரியின் 11வது மாடிக்கு சென்று, அங்கிருந்து கீழே குதித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தினர் உடனடியாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மாணவர் கோகுல் ராமின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.