Advertisement
தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு? முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் முடிவு!

கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தீவிர தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி முகாம்களை அதிகரித்தல் போன்ற முன்னெடுப்புகளை தமிழக அரசு மேற்கொண்டதன் மூலம் தமிழ்நாட்டில் விரைவாக கொரோனா கட்டுக்குள் வந்தது.

மூன்று அலைகள் முடிவடைந்த நிலையில் நான்காவது அலைகுறித்த அதிர்ச்சி செய்திகள் வெளியாகி வருகின்றன. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் சீனாவில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. தென் கொரியாவிலும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

2019 இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா ஓரிரு மாதங்களில் உலகம் முழுவதும் பரவியது. எனவே மீண்டும் சீனாவில் பரவத் தொடங்கியிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தடுப்பூசிகள் அதிகளவில் செலுத்தப்பட்டிருந்தாலும் குறிப்பிட்ட இடைவெளிகளில் உருமாறி மருத்துவ வல்லுநர்களுக்கு சவாலாக உள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை பாதிப்பு குறைந்து வந்தாலும் அண்டை நாட்டு நிலவரங்களைப் பார்க்கும் போது எந்நேரமும் நிலைமை மாறலாம் என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு,மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில் தமிழகத்தில் எடுக்கப்பட்டு வருகிற நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைப்பெற்று வருகிறது. முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறுத்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தடுப்பு குறித்த முக்கிய அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇

Winning the toss is harder than batting

பேட்டிங்கை விட டாஸை வெல்வது கடினமாக உள்ளது

இன்றைய போட்டியில் நாங்கள் 50 முதல் 60 ரன்கள் குறைவாக எடுத்ததே தோல்விக்கு, நான் 50 60 ரன்கள் என்று கூறுவேன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கை விட டாஸை வெல்வது கடினமாக உள்ளது - ருதுராஜ் கெய்க்வாட்!

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

“GST: Not a tax… a waybust!”

“ஜிஎஸ்டி: வரி அல்ல… வழிப்பறி!” - முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.

ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.

1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Suspension of nomination of many important candidates!

பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனு நிறுத்திவைப்பு! கடும் வாக்குவாதம்..

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024:  தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Gold price touched Rs.50 thousand per pound

தங்கம் விலை ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையாகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST | PREV   ( Page 1 of 15333 )   NEXT |  LAST