Advertisement

Do you suffer from hemorrhoids?

மூல நோயால அவதிப்படறீங்களா? தினம் கொஞ்சம் ரோஜா இதழ்களை இப்படி செஞ்சு சாப்பிடுங்க!!

​எப்படி சாப்பிட வேண்டும்?

சாப்பிடுவதற்கு பயன்படுத்தும் போது அவற்றை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். வீட்டில் வளர்ந்த ரோஜாவில் நாம் ரசாயனங்கள் தெளிக்க மாட்டோம். இதுவே கடைகளில் வாங்கியதாக இருந்தால் சிறிது உப்பு தண்ணீரில் பத்து நிமிடம் வரை போட்டு வைத்து பின்பு நல்ல தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளுங்கள்.

நாட்டு ரோஜாக்களை (பனீர் ரோஜா) மட்டும் தான் சாப்பிட வேண்டும்.

காலையில் எழுந்ததும் பல துலக்கிலிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட வேண்டும்.

அதன்பிறகு, நன்கு சுத்தம் செய்த 15 - 20 ரோஜா இதழ்களை (ஒரு பூவின் இதழ்கள்) எடுத்து வாயில் போட்டு நன்கு மென்று அதன சாறு முழுவதும் உள்ளே போகும்படி சுவைத்து முழுமையாக சாப்பிட்டு விட வேண்டும். அதன் பிறகு சிறிது தண்ணீர் வேண்டுமானால் குடித்துக் கொள்ளலாம்.

இதை சாப்பிட்டு அரை மணி நேரம் வரை வேறு எந்த உணவும் சாப்பிடாமல் இருந்தால் இதன் முழு பயனும் உங்களுக்கு கிடைக்கும்.

​மூலநோய்க்கு அருமருந்து

மூல நோய் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு பலரும் பெரும் அவதியடைகிறார்கள். இந்த மூல நோய் உண்டாவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. என்ன தான் மருந்து சாப்பிட்டாலும் ரத்த மூலம், உள்மூலம் ஆகியவற்றை சரிசெய்வது மிகக் கடினமான விஷயம்.

அறுவை சிகிச்சை தான் இறுதியில் தீர்வு என்று சொல்லப்படுகிற மூல நோயின் தாக்கத்தைக் கூட இந்த ரோஜா இதழ்களை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் குறைக்க முடியும்.

காலையில் சாப்பிடுவதை போல ஒரு டம்ளர் நீரில் ஒரு கைப்பிடி ரோஜா இதழ்களைச் சேர்த்து மாலை வேளையில் குடித்து வர மூல நோய் குணமாகத் தொடங்கும்.

​உடலை குளிர்ச்சியாக்கும்

உடல் சூடு அதிகமாக இருப்பவர்களுக்கு வாத, பித்த, கப தோஷங்கள் உடலில் சரியான நிலையில் இருக்காது.. அதுமட்டுமின்றி சருமப் பிரச்சினை, தலைமுடி திர்தல் தொடங்கி அசிடிட்டி உள்ளிட்ட குடல் ஆரோக்கியத்தை பெரிதாக பாதிக்கும். அதனால் எப்போதும் உடலின் வெப்பத்தைக் குறைத்து குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.

உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள ரோஜா இதழ்கள் உதவி செய்யும். அதனால் உடல் சூட்டைத் தணிக்க நினைப்வர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் ரோஜா இதழ்களை மென்று சாப்பிடுங்கள்.

​வயிற்றுப் போக்கு சரியாக

குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பலருக்கும் என்ன சாப்பிட்டாலும் வயிறு வலி, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்கும். அவற்றை சரிசெய்து வயிற்றுப் போக்கை கட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் ரோஜா இதழ்களுக்கு உண்டு.

வயிற்றுப் போக்கு பிரச்சினை அடிக்கடி ஏற்படுகிறவர்கள் ரோஜா இதழ்களை வெந்நீரில். போட்டு கொதிக்க விட்டு அந்த நீரை டீ போல குடித்து வரலாம்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇

Winning the toss is harder than batting

பேட்டிங்கை விட டாஸை வெல்வது கடினமாக உள்ளது

இன்றைய போட்டியில் நாங்கள் 50 முதல் 60 ரன்கள் குறைவாக எடுத்ததே தோல்விக்கு, நான் 50 60 ரன்கள் என்று கூறுவேன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கை விட டாஸை வெல்வது கடினமாக உள்ளது - ருதுராஜ் கெய்க்வாட்!

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

“GST: Not a tax… a waybust!”

“ஜிஎஸ்டி: வரி அல்ல… வழிப்பறி!” - முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.

ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.

1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Suspension of nomination of many important candidates!

பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனு நிறுத்திவைப்பு! கடும் வாக்குவாதம்..

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024:  தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Gold price touched Rs.50 thousand per pound

தங்கம் விலை ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையாகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST | PREV   ( Page 1 of 15333 )   NEXT |  LAST