தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி கட்டாயம் – பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 12ம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கு புதிதாக மின்னஞ்சல் முகவரி தொடங்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி இருக்கிறது.
பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு:
தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் 2023-24 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன் படி தற்போது நவீன மயமாகும் காலத்தில் அனைத்து முக்கிய செய்திகளும் மின்னஞ்சல் மூலமாக பகிர பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன் படி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில், அனைத்து பள்ளிகளிலும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி தொடங்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி இருக்கிறது. மேலும் மாணவர்கள் இந்த மாதம் ஜூலை 30ம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரி தொடங்க தலைமை ஆசிரியர், மற்றும் ஆசிரியர்கள் உதவ வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.