Advertisement
“பன்றி, மாட்டிறைச்சிக்கு நோ : ஹலால் இறைச்சி மட்டுமே” இந்திய கிரிக்கெட் அணியின் புதிய டயட்!

இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகம் நியூசிலாந்து அணிக்கு எதிரான கான்பூர் டெஸ்ட் போட்டிக்கான புதிய டயட் பிளானை அறிவித்துள்ளது. இது பரவலான நெட்டிசன்களை கொதிப்படைய செய்துள்ளது. அதோடு நிர்வாகத்தை நோக்கி கேள்வி எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள். டயட் பிளானில் அப்படி என்ன மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது?

இந்திய அணி வீரர்கள் பன்றி மற்றும் மாட்டிறைச்சி சாப்பிட தடை விதித்துள்ளது இந்த புதிய டயட் பிளான். “பன்றி மற்றும் மாட்டிறைச்சி எந்தவிதமான உணவு வடிவிலும் உட்கொள்ள கூடாது. ஹலால் இறைச்சிகளை மட்டுமே சேர்த்துக் கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியம்” என கேட்டரிங் தேவை குறித்து இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளதாக இந்தியா டுடே பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

இதையடுத்து தான் நெட்டிசன்கள் இந்திய அணி நிர்வாகத்திடம் கேள்விகளை முன் வைத்து வருகின்றனர். வீரர்களின் உணவு விருப்பத்தில் இது மாதிரியான கட்டுப்பாடுகள் கூடாது எனவும் சொல்லியுள்ளனர் சிலர்.

பெரும்பாலும் இந்திய அணி உள்நாடு, வெளிநாடு என எங்கு விளையாடினாலும் ஹலால் உணவு தான் டயட் பிளானில் இடம் பெறுகிறது. நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடும் இந்திய அணியில் இஸ்லாமிய வீரரும் விளையாடுகிறார்.

அதுவே இந்த தொடரில் இந்தியாவுக்கு எதிராகு விளையாடும் நியூசிலாந்து அணி தனது உணவுக்கான மெனுவில் பன்றி மற்றும் மாட்டிறைச்சி அவசியம் தேவை என தெரிவித்துள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றன. முதல் டெஸ்ட் கான்பூரில் வரும் வியாழன் அன்று தொடங்குகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇

“GST: Not a tax… a waybust!”

“ஜிஎஸ்டி: வரி அல்ல… வழிப்பறி!” - முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.

ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.

1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Suspension of nomination of many important candidates!

பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனு நிறுத்திவைப்பு! கடும் வாக்குவாதம்..

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024:  தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Gold price touched Rs.50 thousand per pound

தங்கம் விலை ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையாகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Panguni festival starts with flag hoisting at Oppiliyappan temple

ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருநாகேஸ்வரம் அருகே அமைந்துள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனிப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST | PREV   ( Page 1 of 15332 )   NEXT |  LAST