கோவில்பட்டி:
கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோவில் ஆடி பொங்கல் விழா கடந்த 30-ந்தேதி காலை 9 மணிக்கு அம்மனுக்கு மாக்காப்பு அலங்கார சிறப்பு தீபாரதனையுடன் தொடங்கியது.
இரவு 7 மணிக்கு அங்கையர்கண்ணியின் அருள் என்ற தலைப்பில் தேவி பக்தி சொற்பொழிவு நடைபெற்றது.
2-ம் நாள் காலை 9 மணிக்கு அம்மனுக்கு சந்தன அலங்கார சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு சர்வம் சக்திமயம் என்ற தலைப்பில் சித்ரா கணபதியின் பக்தி சொற்பொழிவு நடைபெற்றது.
நேற்று முன்தினம் 3-ம் நாள் காலை 9 மணிக்கு தெற்கு நந்தவனத்தில் இருந்து பால்குடம் ஊர்வலம் நடந்தது. பகல் 12 மணிக்கு அம்மனுக்கு பாலாபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. மாலை 5 மணிக்கு பெண்கள் மாவிளக்கு ஏந்தி நகர்வலம் வந்தனர். மாலை 6 மணிக்கு 21 அக்னிக்கட்டி நகர்வலமும், இரவு 7 மணிக்கு மேல் காளியம்மன் வெள்ளி சிம்ம வாகனத்தில் வெள்ளிக் குடையின் கீழ் வீற்றிருந்து, தங்க குடம், வாளி கையில் ஏந்தி தீர்த்தம் எடுக்கும் திருக்கோலத்துடன் திருவீதி உலா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ. பி. கே. பழனிச்செல்வம், துணை தலைவர் எம். செல்வராஜ், செயலாளர் எஸ்.ஆர்.ஜெயபாலன், பொருளாளர் டி. ஆர். சுரேஷ் குமார், கோவில் தர்மகர்த்த எஸ். எம். மாரியப்பன், செயலாளர் மாணிக்கம் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.