கார்த்திகை தீபம் ஸ்பெஷல் இனிப்பு அப்பம் எண்ணெய் பிடிக்காமல், நல்ல மிருதுவாக எப்படி செய்வது என்பதை பாருங்கள்
தேவையான பொருட்கள்
பச்சரிசி- 1 கப்
உருட்டு உளுந்து பருப்பு- அரை டேபிள்ஸ்பூன்
துவரம் பருப்பு- 1 டீஸ்பூன்
வாழைப்பழம்- 1
துருவிய தேங்காய்- அரை காப்
வெல்லம்- 1 கப்
செய்யமுறை
அடுப்பில் கடாய் வைத்து சூடானதும், அதில் வெல்லம் போட்டு கால் கப் தண்ணீர் சேர்த்து கரைக்க வேண்டும். பாகு காய்ச்ச கூடாது. வெல்லம் கரைந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு ஆற வைக்கவும்.
பச்சரிசி, உளுந்து, துவரம் பருப்பு மூன்றையும் 2 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் ஊறவைத்த தண்ணீரை வடிகட்டி அதை மிக்சி ஜாடியில் போடவும். அதில் கால் கப் ஊறவைத்த தண்ணீரை சேர்த்து நன்கு கெட்டியாக மையாக அரைத்துக் கொள்ளவும்.
இப்போது அரைத்த வைத்த மாவில் நன்கு கனிந்த வாழைப்பழம் 2 சிட்டிகை உப்பு, கால் டீஸ்பூன ஏலக்காய் பொடி, துருவின தேங்காய் அரை கப் சேர்த்து நன்கு நைஸாக அரைக்கவும்.
மாவில் வடிகட்டியை பயன்படுத்தி, கரைத்து வைத்த வெல்லம் சேர்க்கவும். மீண்டும் மிக்சியில் ஒரு சுற்று அடிக்கவும்.
மாவை மிக்சி ஜாரில் இருந்து வேறொரு பாத்திரத்துக்கு மாற்றவும். இந்த மாவை குறைந்தது 2 மணி நேரம் அப்படியே வைக்கவும்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், ஒரு கரண்டி மாவை எடுத்து எண்ணெய்யில் அப்படியே விடவும். அடுப்பை மீடியம் தீயில் வைக்கவும். அப்பம் எண்ணெய் மேலே மிதந்து வரும் போது ரெண்டு பக்கமும் திருப்பி விட்டு வெந்த பிறகு எடுக்கவும்.
சுவையான கார்த்திகை அப்பம் ரெடி.
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.