திருச்செந்தூர் அருகே காயாமொழியில் உள்ள ராமநாதபுரம் சுடலைமாட சுவாமி உடனுறை இசக்கி அம்மன் கோவிலில் 39-வது வருசாபிஷேகம், கொடை விழா கடந்த 15-ந்தேதி கால்நாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று இரவில் குடியழைப்பு பூஜை நடந்தது.
விழாவின் சிகர நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) கொடை விழா நடைபெறுகிறது. இதையொட்டி காலை 8 மணிக்கு சுனைநீர் தீர்த்தம் எடுத்து வரப்படுகிறது. காலை 11 மணிக்கு கும்ப பூஜை, யாக பூஜையை தொடர்ந்து கோவில் விமானத்துக்கு புனிதநீர் ஊற்றி வருசாபிஷேகம் நடக்கிறது.
மதியம் 2 மணிக்கு மஞ்சள் பால் நீராட்டு நடைபெறும். இரவு 10 மணிக்கு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. இரவு 1 மணிக்கு சாமக்கொடை, படைப்பு தீபாராதனையை தொடர்ந்து பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்கப்படுகிறது.
நாளை (புதன்கிழமை) காலை 6 மணிக்கு பக்தர்களுக்கு வரி பிரசாதம் அளிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.