எவ்வளவு கொலஸ்ட்ரால் இருந்தாலும் பிழிந்து எடுக்கும் மருதம் பட்டை டீ.. நன்மைகளை அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!
மருத மரப்பட்டையில் செய்யப்படும் டீ-யில் இதய நலனைப் பாதுகாக்கும் பண்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரஸ் மற்றும் free radicals காரணமாக ஏற்படும் பாதிப்பை தடுத்து இதயத்தை பாதுகாக்கிறது
ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படும் மருதம் பட்டை க்கு அர்ஜூனா பட்டை என்ற பெயரும் உண்டு. இது நம் உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. மருதம் பட்டையில் தயாரிக்கப்படும் டீ-யை குடிப்பதால் நம் உடலுக்கு என்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை இங்கே காண்போம்.
கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, இதய நலனை மேம்படுத்தும் டீ : உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை, குறிப்பாக கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க டயட் கட்டுப்பாடு முதல் கடுமையான உடற்பயிற்சிகள் வரை என எத்தனையோ முயற்சிகள் செய்து பார்த்தாகிவிட்டது. ஆனால் ஒன்றும் பிரயோஜனமில்லை என நினைக்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறது ஆயுர்வேத டீ ஒன்று. சர்வலோக நிவாரணியாக இருக்கும் இந்த டீயை குடிப்பதால், உங்கள் இதய நலன் இயற்கையாகவே மேம்படுகிறது.
மருதம் பட்டை என்றால் என்ன? டெர்மினலியா அர்ஜூனா என்ற அறிவியல் பெயரில் அழைக்கப்படும் மருத மரப்பட்டை பாரம்பரியமாகவே ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு மருத்துவ நன்மைகள் உள்ளது. முக்கியமாக இதய நலனுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. மருத மரப்பட்டையில் பயோ ஆக்டிவ் கலவைகளான ஃப்ளாவோனாய்ட்ஸ், டானின்ஸ் மற்றும் பிற ஆண்டி ஆக்ஸிடெண்ட் உள்ளது. இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து இதய நலனை மேம்படுத்துகிறது. இதை தினசரி உணவில் ஏன் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான சில காரணங்கள் இதோ…
பாதிப்பை தடுக்கிறது : மருத மரப்பட்டையில் செய்யப்படும் டீ-யில் இதய நலனைப் பாதுகாக்கும் பண்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரஸ் மற்றும் free radicals காரணமாக ஏற்படும் பாதிப்பை தடுத்து இதயத்தை பாதுகாக்கிறது. மேலும் இந்த மருதம் பட்டை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு : மருதம் பட்டையை உணவில் சேர்த்துக் கொள்வதால், தமனியில் ஏற்படும் அடைப்புகளை குறைக்கவும் உடலில் நல்ல கொலட்ஸ்ட்ரால் அளவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் உதவுகிறது. மேலும் நம் உடலில் உள்ள ட்ரைகிளிசரைடுகளை இயற்கையாகவே குறைத்து லிப்பிட் ப்ரொஃபைலை (lipid profile) ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
ரத்த அழுத்த கட்டுப்பாடு : உங்கள் ரத்த அழுத்த அளவை ஆரோக்கியமான நிலையில் வைத்திருக்க மருத மரப்பட்டை உதவியாக இருக்கிறது. ரத்த நாளங்களை தளர்வாக்கவும், ரத்த ஓட்ட எதிர்ப்பை குறைக்கவும் மருதம் பட்டை உதவுகிறது. இதன் மூலம் ரத்த அழுத்தம் குறைகிறது.
இதய செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது : இதய செயல்பாட்டை மேம்படுத்துவதோடு இதயத்திலிருந்து வேறு உறுப்புகளுக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் திறனை அதிகப்படுத்த உதவியாக இருக்கிறது மருதம் பட்டை. மேலும் கரோனரி தமனி ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி ஆஞ்சினா (மார்பு வலி) போன்ற நிலைமை ஏற்படாமல் உதவுகிறது.
அழற்சி எதிர்ப்பு பண்புகள் : மருதம் பட்டையில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இதய நலனிற்கு சிறந்த நன்மையைத் தருகிறது. இது உங்கள் இருதய அமைப்பில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.