ஒன்பிளஸ் நார்டு வயர்டு இயர்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய வயர்டு இயர்போன் ஒன்பிளஸ் நிறுவனத்தின் குறைந்த விலை சாதனமாக அறிமுகமாகி இருக்கிறது. இந்த இயர்போன் 3.5 எம்எம் வயர்டு கனெக்டிவிட்டி கொண்டுள்ளது. வயர்லெஸ் ஆடியோ பிரிவில் கவனம் செலுத்தி வரு்ம நிலையிலும், ஒன்பிளஸ் புதிதாக வயர்டு இயர்போனை அறிமுகம் செய்து இருக்கிறது.
புதிய ஒன்பிளஸ் நார்டு வயர்டு இயர்போன்களில் 3.5 எம்எம் வயர்டு கனெக்டிவிட்டி, 9.2 எம்எம் டைனமிக் டிரைவர்கள் உள்ளன. இதன் டிசைன் மற்றும் ஸ்டைலிங் ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் Z2 போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இந்த இயர்போனில் வயர்டு கனெக்டிவிட்டி, இன்-லைன் ரிமோட், மைக்ரோபோன் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
இன்-லைன் ரிமோட் மற்றும் மைக்ரோபோன் தவிர ஒன்பிளஸ் நார்டு வயர்டு இயர்போன் மேக்னடிக் க்ளிப் உள்ளது. இதை கொண்டு இயர்போன் பயன்படுத்தாத சமயத்தில் சவுகரியமாக வைத்துக் கொள்ளலாம். இந்த இயர்போனுடன் மூன்று வித அளவுகளில் சிலிகான் இயர் டிப்கள் வழங்கப்படுகிறது.
ஒன்பிளஸ் நார்டு வயர்டு இயர்போன்களின் விலை ரூ. 799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் குறைந்த விலை இயர்போன் ஆகும். இதன் விற்பனை செப்டம்பர் 1 ஆம் தேதி தொடங்குகிறது. விற்பனை ஒன்பிளஸ் வலைதளம் மற்றும் ஆப்லைன் விற்பனை மையங்களில் நடைபெற இருக்கிறது.
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.