சென்னை: தமிழகத்துக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. புரேவி புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.இன்னும் நிவர் புயலின் தாக்கமே தமிழகத்தில் இருந்து நீங்கவில்லை.. கடந்த 25 மற்றும் 26ம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த தீவிரமான கனமழையானது, மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை உருவாக்கியுள்ளது.அதன் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.. நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட மத்திய குழு தமிழகம் வருகிறது.. இந்நிலையில், நிவர் புயல் கடந்த தினமே மற்றொரு புயல் வர விருப்பதாக கூறப்பட்டது. அதன்படி, வங்கக் கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் தற்போது ஒரு காற்றழுத்தம் உருவாகியுள்ளதுதெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது... அது மேலும் வலுப்பெற்று புரேவி புயலாக மாறும் என்றும், அந்த புயல் மேற்கு திசையில் நகர்ந்து நாகப்பட்டினம் அருகே தமிழக கடலோரப் பகுதியை நெருங்கி, மன்னார் வளைகுடா வழியாக திருநெல்வேலி மாவட்டம் வழியாக கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறதுஇந்த புயல் தமிழகத்தை நோக்கி வருவதால், டிசம்பர் 2ம் தேதி திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் என்பதால் இந்த 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. மேலும் தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.. பொதுவாக, இந்த ரெட் அலர்ட் என்பது, மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் வகையிலும், அடிப்படை தேவைகளை அடைய முடியாத நிலை ஏற்படும் வகையில் மழைப் பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போதே இந்த எச்சரிக்கை தரப்படும்.. அதாவது, போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படும் வகையில் மழை பெய்யும் போது தான் இது போன்றஎச்சரிக்கைகள் விடப்படும்.. அந்த வகையில் மேற்கூறிய இந்த 5 மாவட்ட மக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதாலேயே ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.