இந்திய அணியின் தோல்விக்கு முழு காரணம் முகமது ஷமிதான் என பலர் குற்றம்சாட்டி வருகிறார்கள். ஷமி வீசிய 18ஆவது ஓவரில் மட்டும் 17 ரன்கள் அடைக்கப்பட்டன. இதனால், அந்த ஓவரிலேயே பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது. இருப்பினும், அதற்கு முன்பே இந்திய அணியின் தோல்வி உறுதியாகிவிட்டது. ஆனாலும்கூட, முகமது ஷமி ஒரு இஸ்லாமியர் என்பதால்தான் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி, பாகிஸ்தானை வெற்றிபெற செய்தார் என பலரும் விஷமத்தனமாக கூறி வருகின்றனர்.
இதற்கு பிசிசிஐ மற்றும் இந்திய அணி வீரர்கள் யாரும் சிறு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. இதுதான் தற்போது புயலை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் ட்வீட் ல் வெளியிட்டுள்ள செய்தியில் , இந்திய அணியை நாம் ஆதரிக்கிறோம் என்றால் இந்தியாவுக்காக விளையாடும் வீரர்களையும் நாம் ஆதரிக்க வேண்டும். முகமது ஷமி உலகத்தரமான பந்துவீச்சாளர். மற்ற வீரர்களை போலவே, அன்று ஷமிக்கு மோசமான நாளாக அமைந்துவிட்டது. நான் முகமது ஷமிக்கு பின்னாலும், இந்திய அணிக்கு பின்னாலும் நிற்கிறேன் என பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் வைரலாகி வரும் நிலையில், பலரும் ஷமிக்கு ஆதரவாக கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.