திருப்பூர் அமராவதி நகரில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் சைனிக் பள்ளியில் ஆசிரியர், ஆய்வக உதவியாளர் உள்பட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. 12ம் வகுப்பு முடித்தவர்கள் முதல் பிஎப்ட படித்தவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.22 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் என பணியை பொறுத்து சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் சார்பில் இந்தியாவில் பல இடங்களில் சைனிக் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் அமராவதிநகரில் உள்ள சைனிக் பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. இந்த பணிகள் குறித்த விபரங்கள் வருமாறு:
இந்த பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இந்த பணியை விரும்புவோர் இயற்பியல் துறையில் எம்எஸ்சி மற்றும் பிஎட் முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.45 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பத்தாரர்கள் 21 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கணித ஆசிரியர்: இந்த பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இந்த பணிக்கு கணிதத்தில் பிஎஸ்சி-பிஎட் படித்திருக்க வேண்டும். மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளமாக கிடைக்கும். பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 21 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இந்த பணிக்கும் ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்கு ஆங்கிலத்தில் பிஏ , பிஎட் முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பம் செய்வோர் 21 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஆய்வக உதவியாளர்: இயற்பியல் ஆய்வகத்துக்கான உதவியாளர் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இந்த பணிக்கு 12ம் வகுப்பில் இயற்பியலை ஒரு பாடமாக படித்து முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பத்தாரர்கள் 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இந்த பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். பச்மார்ஹி ஏஇசி பயிற்சி கல்லூரியில் பேண்ட் மாஸ்டர், பேண்ட் மேஜர், டிரம் மேஜர் படிப்பு அல்லது அதற்கு நிகரான கடற்படை, விமானப்படை படிப்புகளை முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.28 ஆயிரம் சம்பளமாக கிடைக்கும். பணியை பெற விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் 21 வயது முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.
Counselor: இந்த பணிக்கும் ஒருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளார். முதுகலை பிரிவில் சைக்கலாஜி, கிளினீக்கல் சைக்கலாஜி அல்லது சைல்ட் டெவலப்மென்ட் இல்லாவிட்டால் டிப்ளமோவில் கேரியர் கைடென்ஸ் அன்ட் கவுன்சிலிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளமாக கிடைக்கும். விண்ணப்பம் செய்வோர் 21 வயது முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பிஇஎம்/பிடிஐ -கம் மேட்ரான் (பெண்): PEM/PTI-cum-matron (Female) பணிக்கும் ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்கு இடைநிலை படிப்பை முடித்து ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.22 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பத்தாரர்கள் 21 வயது முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி: மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோரில் அரசு விதிகளின்படி வயது தளர்வு என்பது வழங்கப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் http://www.sainikschoolamaravahinagar.edu.in எனும் இணையதளத்தில் விண்ணப்பம் டவுன்லோட் செய்து பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து ‛‛Principal, Sainik School, Amaravathinagar, Pin - 642 102, Udumalpet Taluk, Tiruppur District என்ற முகவரிக்கு டிசம்பர் 26ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும்
தேர்வு செய்வது எப்படி: விண்ணப்ப கட்டணமாக ரூ.300 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் ரூ.200 செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணத்தை செலுத்துவது கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணைப்பில் விரிவாக கூறப்பட்டுள்ளது. இப்படி பணிக்கு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, திறனறி தேர்வு, நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.