வழக்கமாக வெங்காயம் விலைதான் அதிரடியாக உயர்ந்து மக்களை கண்ணீர் விட வைக்கும். ஆனால் இந்த முறை தக்காளி அந்த வேலையைப் பார்த்து வருகிறது. காய்கறிகளில் முக்கியமானது தக்காளி. குழம்பில் இருந்து ரசம், கூட்டு, தக்காளி சாதம் என்று சமையலில் எங்கு பார்த்தாலும் தக்காளி மயம் தான்.
அப்படிபட்ட தக்காளியின் விலை கிடு கிடுவென உயர்ந்தது மக்களை திணற வைத்துள்ளது. விண்ணை தொடும் விலையினால் இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது தக்காளி. இந்நிலையில், கோவையில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தினர் விஜய் ரசிகர்கள்.
கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்க இளைஞரணி துணைத் தலைவராக இருப்பவர் மகேஸ்வரன். இவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி கோவை குறிச்சி பிரிவு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட விஜய் மக்கள் இயக்க மாவட்ட இளைஞரணி தலைவர் விஜய் யுவராஜ் மற்றும் நிர்வாகிகள், திடீரென மணமக்கள் மகேஸ்வரன், ஸ்ருதி ஆகியோருக்கு தக்காளிகளை பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்து ஆச்சரியப்படுத்தினர்.
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.