Advertisement

👇கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்பவும்👇
>>
ஹைட்ரோபோபியா என்ற நொய்யால் ஆடு மேய்க்க சென்ற மூதாட்டியை கல்லால் அடித்து கொன்று நரமாமிசத்தை உண்ட இளைஞர்! அதிர்ச்சி சம்பவம்

ராஜஸ்தானில் மூதாட்டியை இளைஞர் ஒருவர் கொடூரமாக கொலை செய்து அவரது நரமாமிசத்தை உண்ட பகீர் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த இளைஞர் அரிய வகை நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் உள்ள சர்தானா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் 65 வயதான சாந்தி தேவி. இந்த மூதாட்டி கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டில் இருந்து வயல் பகுதிக்கு ஆடுகளை ஒட்டி மேய்சலுக்காக சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த ஒரு இளைஞர் கல்லால் அடித்து தாக்கத் தொடங்கியுள்ளார். அவர் தோற்றமும் செயல்பாடுகளும் விசித்திரமாக இருந்துள்ளன. இளைஞரின் கோர தாக்குதலில் மூதாட்டி சாந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து அந்த இளைஞர் மூதாட்டியின் உடலை கிழித்து அந்த நர மாமிசத்தை உட்கொள்ள ஆரம்பித்தார்.

இதை அந்த பகுதி வழியாக வந்த மூதாட்டியின் மகன் பிரேன் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். கோர காட்சியை பார்த்ததும் அங்கிருந்து பயந்து ஓடி, ஊர் மக்களை அழைத்து வந்துள்ளார். இறந்த மூதாட்டியின் நரமாமிசத்தை சாப்பிட்டு உடல் முழுவதும் ரத்தக் கறைகளுடன் இருந்த இளைஞரை பார்த்து ஊர்காரர்கள் பயத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்து நின்றனர்.

காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அவர்கள் விரைந்து வந்து இளைஞரை கைது செய்தனர். இளைஞரை சோதனை செய்ததில், அவர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த சுரேந்திர தாக்கூர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர் ராபீஸ் நோய் பாதிப்பு ஆளான நாயால் கடிக்கப்பட்டவர், அதற்கு உரிய சிகிச்சை பெறாததால் இத்தகைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. இவருக்கு hydrophobia எனப்படும் நாய் கடி பாதிப்பின் முதிர்ந்த நோய் தன்மை ஏற்பட்டுள்ளது. இந்த அரிய நோய் தன்மை கொண்டவர்களுக்கு நீரை பார்த்தாலே அச்சம் ஏற்படும்.

மூதாட்டியை கொலை செய்து சாப்பிட்ட சுரேந்திரா மும்பையில் இருந்து பஸ் மூலம் ராஜஸ்தான் வந்துள்ளார். அவரிடம் இருந்த அந்த டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சம்பவம் குறித்து மூதாட்டியின் மகன் கொடுத்த புகாரின் பேரில் சுரேந்திரா மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை அவரை சிறையில் அடைத்தனர். அவருக்கு மருத்துவ சோதனையும் நடத்தப்படுகிறது.
 

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
10-ம் வகுப்பு மாணவி பள்ளியில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அயோத்தியில் சன்பீம் என்று தனியார் பள்ளி உள்ளது. பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்த பள்ளியின் முதல்வர், பத்தாம் வகுப்பு மனைவி வீட்டிற்கு தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பள்ளிக்கு வருமாறு அழைத்துள்ளார்.

அந்த மாணவி அன்று காலை 9 மணி அளவில் பள்ளிக்குச் சென்றுள்ளார். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து மாடியில் இருந்து மாணவி தவறி விழுந்து உயிரிழந்துவிட்டதாக மாணவியின் பெற்றோருக்குத் தகவல் வந்துள்ளது.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பள்ளிக்கு வந்து பார்த்தபோது அவர்களுக்கு மகளின் உடலைப் பார்த்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கேட்டபோது பள்ளி நிர்வாகம் முன்னுக்குப் பின் முரணாகத் தகவல் கொடுத்துள்ளது.

மாணவி ஊஞ்சலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாகப் பள்ளியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மாடியில் இருந்து கீழே விழுந்த காட்சிகள் சிசிடிவியில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. மாணவியை யாரோ மேலே இருந்து தூக்கி வீசி இருக்கிறார்கள் எனப் பெற்றோர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். மாணவி விழுந்த இடத்தில் ரத்தக்கரை உள்ளிட்ட தடயங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன.


இதில் சந்தேகமடைந்த அந்த மாணவியின் பெற்றோர் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில், மாணவி பயிலும் பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் அபிஷேக் மற்றும் மேலாளர் பெரிய யாதவ சேர்ந்து தனது மகளைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து அதனை மறைப்பதற்காக மாடியில் இருந்து தூக்கி வீசி உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.


மேலும் இந்த குற்றத்திற்கு அந்த பள்ளியின் முதல்வர் ராஷ்மி பாடியாவு ம் உடந்தை எனக் குற்றம் சாட்டியுள்ளார். புகாரின் பேரில் அயோத்தி காவல் துறையினர் பள்ளி முதல்வர் மேலாளர் விளையாட்டு ஆசிரியர் என அனைவரின் மீதும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை கொலை பிரிவான 302, போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
புக் எடுக்க வந்த மாணவி.. தலைமை ஆசிரியர் செய்த காரியம்.. அடி வெளுத்த ஊர் மக்கள்..!

திண்டிவனம் அருகே அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமை ஆசிரியரை தாக்கிய ஊர் மக்கள்...

விரிவாக படிக்க >>
Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
மனிதகுலத்தை அழிக்கும் கொடூரமான செயல்! குளிர்சாதன பெட்டியில் 5 வயது சிறுவன் படுகொலை

பிந்த், மத்தியப் பிரதேசம்: மனிதகுலத்தை அழிக்கும் கொடூரமான செயல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது மத்திய பிரதேசத்தில் நடந்த சம்பவம். பிந்த் மாவட்டத்தில் இருந்து இந்த பயங்கர தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஐந்து வயது சிறுவன் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டான். இந்த குழந்தையின் உடல் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டது. மதியம் டியூஷனுக்குச் சென்ற சிறுவன் அங்கு வரவில்லை. அவர் வீட்டிற்கு வரும் நேரம் முடிந்ததும், பெற்றோர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். விஷயம் போலீஸ் வரை சென்றது. இறுதியாக, அப்பகுதியில் உள்ள குளிர்சாதன பெட்டியில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

என்ன நடந்தது?

இந்த கொடூர சம்பவம் பிண்டில் நடந்துள்ளது. மச்சந்த் காவல் நிலையப் பொறுப்பாளர் விவேக் பிரபாத் கூறுகையில், புதன்கிழமை மாலை 3.30 மணியளவில் ஐந்து வயது சிறுவன் டியூஷனுக்குச் சென்றான். ஆனால் அவர் டியூஷனுக்கு வரவில்லை. அவர் சரியான நேரத்தில் வீட்டிற்கு வராததால், பெற்றோர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். புதன்கிழமை அவர் டியூஷனுக்கு வரவில்லை என்பது தெரிந்தது. இதையடுத்து, உறவினர்கள் போலீஸாருக்கு விரைந்து வந்தனர்.

உறவினர்கள் புகார் அளித்ததையடுத்து, போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இந்தக் குழந்தையுடன் மற்ற குழந்தைகள் டியூஷனுக்குச் செல்வது குறித்து விசாரித்தார். அவர் அருகில் வசிக்கும் சந்தோஷ் சவுராசியா என்பவரது வீட்டிற்கு சென்றது தெரிய வந்தது. அதன் பிறகு அவர் டியூஷனுக்கு வரவில்லை. இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சந்தோஷ் சவுராசியா வீட்டில் சோதனை நடத்தினர். அங்கிருந்த காட்சியை பார்த்து போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர்.

சந்தோஷ் சௌராசியாவின் வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள குளிரூட்டியில் சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. குழந்தையின் கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன. போலீசார் உடலை வெளியே எடுத்தனர். குழந்தையின் இந்த நிலையை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இப்படி ஒரு குழந்தைக்கு தீங்கு செய்வது என்ன வக்கிரம்? குழந்தையின் உடல் சந்தோஷ் சௌராசியாவின் வீட்டில் கண்டெடுக்கப்பட்டது, அவர் தற்போது தலைமறைவாக உள்ளார். தற்போது சிறுவனின் குடும்பத்தினர் மற்றும் காலனியில் உள்ள மற்றவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூரத்தின் உண்மையான காரணம் என்ன? இது குடும்பத்தாரா அல்லது வேறு ஏதேனும் கோளாறா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
போரூர் அருகே 2 நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டவர் பிரபல ரவுடி என உறுதி - திட்டம் தீட்டி தீர்க்க கட்டிய கொடூர கும்பல்

போரூர் அருகே இரண்டு நாட்களுக்கு முன்பு வெட்டி கொலை செய்யப்பட்டவர் பிரபல ரவுடி வினோத் என அடையாளம் காணப்பட்டது....

விரிவாக படிக்க >>
Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
சைபர் க்ரைம்.. 1.5 லட்சத்தை இழந்த மனைவி.. கணவர் மீது வழக்கு.. என்னப்பா நடக்குது.!

முத்தலாக் சொன்னதால் கணவர் மீது ஒடிசா காவல்துறை வழக்கு பதிவு செய்தது....

விரிவாக படிக்க >>
Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
‘நீங்கள் நல்ல மனிதர்.. கொலை செய்வதற்கு மன்னிக்கவும்..’ - பலான காரியத்தால் வந்த வினை.!

டெல்லியில் தொழிலதிபர் கொல்லப்பட்ட சம்பவத்தில் இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்....

விரிவாக படிக்க >>
Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
மதுவில் விஷம் கலந்து கொடுத்து முதியவரை கொன்று நகை கொள்ளை – தம்பி மகன் கைது!

காஞ்சீபுரம் அருகே மதுவில் விஷம் கலந்து கொண்டு முதியவரை கொன்று நகை கொள்ளையடிக்கப்பட்டது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
பிக்பாஸ் அபிராமியும் இப்படியா.? பாலியல் புகாரில் கைதான ஆசிரியருக்கு ஆதரவாக குரல்... எல்லாத்துக்கும் காரணம் நிர்மலாவாம்..!

கலாசேத்ரா கல்லூரியில் படித்த முன்னாள் மாணவி கொடுத்த பாலியல் புகாரில் கைதான நாட்டிய ஆசிரியர் ஹரி பத்மனுக்கு ஆதரவாக பிக்பாஸ் நடிகை அபிராமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கலாசேத்ரா ஆசிரியை நிர்மலா தான் மாணவிகளை தூண்டிவிடுவதாக குற்றஞ்சாட்டி உள்ளார்நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட சில படங்களில் நடித்ததோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் நடிகை அபிராமிகலாசேத்ரா கல்லூரியில் 100க்கும் மேற்பட்ட மாணவிகளால் முன்வைக்கப்பட்ட பாலியல் புகாருக்கு எதிராக கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கி உள்ளார் அபிராமி.சென்னை காவல்......

விரிவாக படிக்க >>
Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 3 of 13 )   NEXT |  LAST