ராஜஸ்தானின் ஆல்வாரில் 13 மற்றும் 15 வயதுடைய இரண்டு சகோதரிகளை இரண்டு பேர் கும்பல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் செங்கல் சூளையில் பணிபுரியும் சிறுமியின் தந்தையின் சக ஊழியர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மூத்த சகோதரி வயிற்று வலியால் அவதிப்பட்டதை அடுத்து, அவர் 7 மாத கர்ப்பிணியாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மருத்துவ பரிசோதனையில் மற்ற சகோதரி 2 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் சாட்னா மாவட்டம் உள்ள மைஹார் அடுத்துள்ள கிராமத்தில் வசித்து வந்த 12 வயது சிறுமி திடீரென காணவில்லை. நீண்ட நேரமாகியும் மகள் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, சிறுமி மாயமானது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், அவரது வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியிடம் விசாரணை நடத்திய போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. சிறுமி கதற கதற முரட்டுதனமாக பலாத்காரம் செய்யப்பட்டு வெறி தீராததால் உடல் முழுவதும் கடிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. சிறுமியின் அந்தரங்க உறுப்பில் கடுமையான காயங்கள் இருப்பதும் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக ரவீந்திர குமார் ரவி மற்றும் அதுல் படோலியா என இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் ஒருவர் அருகில் உள்ள பிரபல கோவிலுக்கு சொந்தமான பசு காப்பகத்தில் வேலை பார்த்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த மகாலட்சுமி நகர் பகுதியில் கடன் பிரச்சினை காரணமாக கணவன் மனைவி தற்கொலை தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்த கருத்தோவியன் (62)....
விரிவாக படிக்க >>ஆந்திராவில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததால் மனைவி கை விரல்களை உடைத்து தனி அறையில் அடைத்து உணவு வழங்காமல் சித்ரவதை செய்த ஊர்காவல் படையை வீரர் குளியல் அறையில் குழாயில் தண்ணீர் குடித்து உயிர்......
விரிவாக படிக்க >>தமிழகத்தைச் சேர்ந்த குறவர் இன மக்களை ஆந்திர மாநில போலீசார் பிடித்து அடித்து, மிளகாய் பொடி தூவி கொடுமைப்படுத்தியுள்ளனர்....
விரிவாக படிக்க >>பெண்ணிடம் இருந்து ரு.45 லட்சத்தை பறித்து கொலை மிரட்டல் - பாஜக நிர்வாகி கைது
சென்னை கொரட்டூரில், பெண்ணிடம் இருந்து ரூ.45 லட்சம் பறித்துச் சென்றதுடன் கொலை மிரட்டல் விடுத்த பாஜக மாநில நிர்வாகி மிண்ட் ரமேஷ் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாஜக நிர்வாகி மிண்ட் ரமேஷ் என்பவர் மீது வடசென்னையில் உள்ள காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.