Advertisement

👇கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்பவும்👇
>>

No matter how old you are, will you be young?

எவ்வளவு வயதானாலும் இளமையா இருக்கனுமா..?

அழகாக இருக்க வேண்டும் என்று தான் ஒவ்வொருவருமே விரும்புகின்றனர். ஆனால் வயது ஏற ஏற நம்முடைய சருமத்தின் அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு தோளில் சுருக்கம் ஏற்படுவது போன்ற பல்வேறு விஷயங்கள் நமக்கு வயது கூடுவதை மிகவும் வெளிப்படையாக காண்பித்து விடும். ஆனால் இனி உங்களுக்கு அதை பற்றிய கவலை வேண்டாம்

இன்றைய நிலையில் சருமத்தை பராமரித்து இளமையாகவே தோற்றமளிக்க பல்வேறு சிகிச்சைகள் முறைகளும் சரும பராமரிப்பு குறிப்புகளும் பல்வேறு தரப்பினரும் பின்பற்றி வருகின்றனர். சிலர் இந்த முறைகளைப் பின்பற்றி மீண்டும் மீண்டும் தனது சருமத்தை இளமையாக மாற்றிக் கொள்ள முடியும். சிலர் இந்த முறைகளை பின்பற்றுவதன் மூலம் வயதானால் சருமத்தில் ஏற்படும் அறிகுறிகளை குறைக்க முடியும். அந்த வகையில் எப்போதும் இளமையாக தோற்றமளிக்க உதவும் சில சரும பராமரிப்பு குறிப்புகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

சூரியனிலிருந்து சருமத்தை பாதுகாக்க வேண்டும்: நீங்கள் இளமையாக தோற்றம் அளிக்க வேண்டும் எனில் முதற்கட்டமாக சூரிய கதிர்களில் இருந்து உங்களது சருமத்தை பாதுகாக்க வேண்டும். சூரிய கதிர்கள் நமது சருமத்தில் நீண்ட நேரம் படும் போது அவை வயதான அறிகுறிகளை மிக விரைவாகவே வெளிப்படுத்தி விடுகின்றன. சூரியனிலிருந்து வெளிப்படும் புற ஊதா கதிர்கள் நமது சருமத்தில் உள்ள கொலாஜன் மற்றும் எலாஸ்டினை சேதப்படுத்தும்.

இந்த இரண்டும் தான் நமது சருமத்தை ஆரோக்கியமாகவும், இளமையாகவும் வைத்திருக்க உதவுகிறது. வெளியே செல்லும்போது 30 அல்லது அதற்கு மேற்பட்ட எஸ்பிஎஃப் உடைய சன் ஸ்கிரீனை பயன்படுத்துவது புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவும்.

ஆன்ட்டி ஏஜிங் சீரம் மற்றும் கிரீம்களை பயன்படுத்தலாம்: தற்போது சந்தையில் பல்வேறு விதமான ஆண்டி ஏஜிங் சீரம் மற்றும் கிரீம்கள் மிக எளிதாக கிடைக்கின்றன. இவற்றில் நமது சருமத்தில் உள்ள சுருக்கங்களை மறைக்கவும் இளமையாக தோற்றமளிக்கவும் பல்வேறு விதமான ப்ராடெக்டுகள் இருக்கின்றன. இவற்றில் உள்ள வைட்டமின் சி, ஹைட்ராலிக் ஆசிட் மற்றும் பெப்டைட்ஸ் ஆகியவை சருமம் இளமையாக தோற்றமளிக்க உதவுகின்றன.

தினசரி மாய்சுரைசர் பயன்படுத்த வேண்டும் : வயது ஏற ஏற நமது சருமம் மிகவும் வறண்டு காட்சியளிக்கும். அந்த சமயத்தில் தான் சருமத்தில் சுருக்கங்களும் வரிவரியாக கோடுகளும் தோன்ற ஆரம்பிக்கும். தினசரி மாய்ஸ்சரைசரை பயன்படுத்தும் போது அவை சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைத்து இளமையாக தோற்றமளிக்க உதவுகிறது. தினசரி காலையும், மாலையும் மாய்சுரைசர் பயன்படுத்துவது சருமத்தை இளமையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.

ஃபேஸ் வாஷை பயன்படுத்தவும்: முகம் கழுவும் போது ஜென்டிலான கிளன்சிங் ஃபேஸ் வாஷை பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது. இதனால் வயதாகும் போது நமது சருமத்தில் சுரக்கும் எண்ணெய் பசை மிகவும் குறைவாகவும், அதே சமயம் சருமம் மிகவும் சென்சிட்டிவாகவும் மாறிவிடும். எனவே ஃபேஸ் வாஷை தேர்வு செய்யும்போது சருமத்தை மென்மையாக மாற்றக் கூடிய வகையில் உள்ள பேஸ் வாஷை தேர்வு செய்ய வேண்டும்.

 

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Heartburn... Causes, Effects, Solutions!

நெஞ்செரிச்சல்... காரணங்கள், விளைவுகள், தீர்வுகள்!

வயிற்றில் சுரக்கும் அமிலமானது உணவுக்குழாயில் திரும்ப மேல் நோக்கி வருவதால் ஏற்படக்கூடியதுதான் நெஞ்செரிச்சல். இது, சில உடல் உபாதைகளுக்கான ஓர் அறிகுறி. எனவே, நெஞ்செரிச்சலை நிராகரிக்காமல், உடனுக்குடன் தீர்வு காண்பது நல்லது. இல்லையென்றால், அதுவே ஒரு நோயாகக்கூட மாறலாம். அதனால் ஏற்படும் சில பிரச்னைகள் குறித்தும், அதற்கான  காரணங்கள், விளைவுகள் மற்றும் சிகிச்சைகள் குறித்து இதயநோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் குகன்நாத் விரிவாகச் சொல்கிறார் இங்கே...  
 

ஏன் ஏற்படுகிறது?

நாம் உண்ணும் உணவு, உணவுக்குழாய் (Esophagus) வழியாக வயிற்றுப்பகுதியைச் சென்றடையும். உணவுக்குழாயின் மேல்பகுதியிலும், கீழ்ப்பகுதியிலும் (இரைப்பைக்கு மேல்) திறந்து, மூடும் வடிவிலான தசைகள் இருக்கும். மேலே உள்ள தசை, நாம் சாப்பிடும்போது உணவு மூச்சுக்குழாய்க்குள் போய்விடாமல் இருக்க உதவக்கூடியது. அதேபோல் கீழே உள்ள தசை, இரைப்பைக்குச் சென்ற உணவு அதன் அமிலத்தன்மை காரணமாக மேல்நோக்கிச் சென்றுவிடாமல் இருக்க உதவும்.

ஆனால், செரிமானத்தின்போது வெளியாகும் அமிலமானது, உணவுக் குறைபாடு காரணமாகவோ, இரைப்பை அழற்சி காரணமாகவோ இரைப்பையின் அருகில் இருக்கும் மூடிகளின் கட்டுப்பாட்டை மீறி மீண்டும் மேல்நோக்கி உணவுக் குழாயில் பயணிக்கத் தொடங்கும். இந்த நிகழ்வின்போது உணவுக்குழாயின் இருபக்கங்களிலும் அமிலம் தேங்கிவிடும். இதன் காரணமாகத்தான் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.
காரணங்கள்...
உடல் பருமன், புகைபிடித்தல். மது அருந்துதல், நேரத்துக்குச் சாப்பிடாமல் இருத்தல், அதிக உணவு உட்கொள்ளுதல், மருத்துவரின் பரிந்துரையின்றி எடுத்துக்கொள்ளும் மருந்துகள் (உதாரணமாக ஆஸ்பிரின், வலி நிவாரணிகள்) போன்றவை நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்கள். சிலருக்கு, இரவுத் தூக்கத்தின்போது நெஞ்செரிச்சல் ஏற்படும். உணவு உண்டவுடன் செரிமானத்துக்கு நேரம் தராமல் உறங்குவதால், வயிற்றில் உருவாகும் அமிலம் உணவுக்குழாயை நோக்கி நகர்ந்து பிரச்னையை ஏற்படுத்தும். 

`Gerd’ எனப்படும் செரிமானக் கோளாறுகளுக்கு, நெஞ்செரிச்சல் மிகமுக்கியமான அறிகுறி. இதில் Gerd 1,2,3 என மூன்று வகைகள் உள்ளன. முதல் இரண்டு வகைகளையும் மருந்து மற்றும் வாழ்வியல் மாற்றங்கள் மூலம் சரிசெய்துவிடலாம். மூன்றாவது வகை, ஆபத்தானது. இரைப்பைக்கு மேலிருக்கும் சுருங்குத் தசைகள் முற்றிலுமாக அழிந்துவிடுவதையே இதுகுறிக்கும். நெஞ்செரிச்சலைத் தொடர்ந்து உதாசீனப்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு இது. இதற்கு லேப்ரோஸ்கோப்பிக் அறுவைசிகிச்சை செய்யவேண்டியது அவசியம்.

அக்கறை எடுத்துக்கொள்ளாமல் விடப்படும் நெஞ்செரிச்சல்கள், அதன் தொடர்ச்சியாக பித்தப்பைக் கட்டி, அல்சர், குடலிறக்கம், இரைப்பை வாதம், சுருக்கத் தசைகள் அழிவு போன்ற பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். மேலே குறிப்பிட்டுள்ள காரணங்களை கவனத்தில் கொண்டு அவற்றைத் தவிர்க்கவில்லையென்றால், பேரட்’ஸ்  ஈஸோஃபேகஸ் (Barrett's esophagus) என்ற பாதிப்பு ஏற்படும். இந்தப் பாதிப்பு வந்தவர்கள், ஆண்டுக்கு ஒருமுறை எண்டோஸ்கோப்பி செய்து, புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்பதை அறிய வேண்டும். கவனிக்காமல்விடும் பட்சத்தில், இது புற்றுநோய் பாதிப்பாக மாறும்.


சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், கொழுப்பு, முதுமை போன்றவற்றால் இதய பாதிப்பு காரணமாக ஏற்படும் நெஞ்சுவலியை சிலர் நெஞ்செரிச்சல் என்று தவறாக எண்ணிக்கொள்வதுண்டு. இதுபோன்ற பாதிப்புகள் உள்ளவர்கள், அவ்வப்போது மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது. 10 நாள்களுக்கும் மேலாக நெஞ்செரிச்சல் தொந்தரவு இருக்குமேயானால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
 

எப்படிக் கண்டறிவது?

உணவு உண்ணும்போது, உணவை விழுங்குவதற்குச் சிரமப்படுவது, குரல்வளம் மற்றும் தொண்டையில் வாரக்கணக்கில் சிக்கல் நீடிப்பது, (ஒரு வாரத்துக்கும் மேல் கரகரப்பான குரலில் பேசுவது, அதிகம் தண்ணீர் தாகம் எடுப்பது முதலியவை) இரவு தூங்கும்போது மூச்சுவிட முடியாமல் திணறிக்கொண்டு இருமுவது போன்றவை இதன் அறிகுறிகள்.
குண்டாக இருப்பவர்கள், அதிகம் சாப்பிடுபவர்கள், இறுக்கமான ஆடை அணிபவர்கள் மற்றும் புகை சூழ்ந்த பகுதியில் இருப்பவர்களுக்கு ஒரு வாரத்தில் இரண்டு முறைக்கும் மேல் நெஞ்செரிச்சல் ஏற்பட்டால், அவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். குறிப்பாக, இரவு நேரத்தில் நெஞ்செரிச்சல் ஏற்பட்டால், மரபுரீதியாக ஏற்படும் பிரச்னைகளில் இதுவும் ஒன்று என்பதைக் கருத்தில்கொள்ள வேண்டும். ஆகவே, குடும்பத்தில் யாருக்கேனும் உணவுக்குழாய் சிக்கல்களோ, உணவுக்குழாயில் புற்றுநோயோ இருந்தால் மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.


எப்படித் தவிர்ப்பது?

சாப்பிட்டவுடன் உறங்குவதைத் தவிர்க்கவும். இரவுநேரத்தில், உணவுக்கும் உறக்கத்துக்கும் மூன்று மணிநேர இடைவெளி விட வேண்டும். அதிகமாக சாப்பிடக் கூடாது. நொறுக்குத்தீனிகளை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். பாதி வயிறு உணவும், மீதித் தண்ணீருமாக இருக்க வேண்டும். மது அருந்துதல் மற்றும் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், அதைவிட்டு முழுமையாக வெளிவர வேண்டும்.  குறிப்பாக இரவில் குறைவாக உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.


சாக்லேட் அதிகம் சாப்பிடாமலிருப்பது, டீ -காபி அதிகம் அருந்தாமல் இருப்பது, ஃப்ரைடு உணவுகள், காரம் மற்றும் மசாலா வகை உணவுகளை தவிர்ப்பது, அமிலம் இருக்கும் உணவை (சிட்ரஸ், கால்சியம்) உட்கொள்ளாமலிருப்பது நல்லது. கூடியவரை இரவு நேரத்தில், இவற்றை அறவே தவிர்த்தல் நல்லது. வேறு சில மருத்துவச் சிகிச்சைகள் எடுப்பவர்கள், இந்த நெஞ்செரிச்சல் பிரச்னையை மருத்துவர்களிடம் கூறி அதற்கேற்ப மருந்துகளை உட்கொள்வது நல்லது.

அமிலத்தன்மையைக் குறைக்கும் உணவை உட்கொள்ள வேண்டும். நெஞ்சில் எரிச்சல் ஏற்பட்டவுடன் சிலர் ஜெலுசில் (Gelusil), ரானிடிடின் (Ranitidine) போன்ற மாத்திரைகளை உட்கொள்வார்கள். இது தவறில்லை என்றாலும், பத்து நாள்களுக்கும் மேல் தொடர்ச்சியாக ஜெலுசில் எடுத்துக்கொள்வது நல்லதல்ல. நிறைய தண்ணீர் குடித்துவர வேண்டும். சரியான அளவு தூக்கம் அவசியம்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Attention Diabetics: 7 Immunity-Building Indian Foods

நீரிழிவு நோயாளிகள் கவனத்திற்கு: நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் 7 இந்திய உணவுகள்

ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் முறையான உடற்பயிற்சி ஆகியவை இன்றைய வாழ்க்கை முறையில் பலரும் கடைபிடிக்காத ஒன்று. இதனால் நீரிழிவு உள்ளிட்ட பல வியாதிகள் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரிடத்திலும் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. தற்போதைய சூழலில் உலகிலேயே அதிகம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. மேலும் அந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கப்போகிறது என்பது தான் கூடுதல் கவலையளிக்கும் செய்தி. இதில் இருந்து தப்பிக்க அல்லது நீரிழிவு நோயை சமநிலையாக பேண உணவு முறை மற்றும் உடற்பயிற்சி கட்டாயம் அவசியம். 

அந்தவகையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் மற்றும் இரத்த சர்க்கரை கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்தும் 7 இந்திய உணவுகளை இங்கே தெரிந்து கொள்வோம்.

 

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்

1. மஞ்சள்: இந்த துடிப்பான மசாலாவில் குர்குமின் உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளுக்கு பெயர் பெற்றது. மஞ்சள் நுகர்வு மேம்படுத்தப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இரத்த சர்க்கரை ஒழுங்குமுறை ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.

2. தயிர்: புரோபயாடிக்குகள் நிறைந்த, தயிர் ஆரோக்கியமான குடலை பராமரிக்க உதவுகிறது, இது நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சர்க்கரை உட்கொள்ளலைக் கண்காணிக்க இனிக்காத தயிரைத் தேர்வு செய்யவும்.

3. பூண்டு: இந்திய சமையலில் பிரதானமான பூண்டு, அதன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளுக்காக உணவில் சேர்க்கப்படுகிறது. இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.

4. பசலைக்கீரை: வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பிய கீரை எந்த உணவிலும் ஒரு சிறந்த கூடுதலாகும். இதன் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாக அமைகிறது.

5. வெந்தயம்: வெந்தய இலைகள் மற்றும் விதைகள் அவற்றின் கரையக்கூடிய நார்ச்சத்து காரணமாக இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் உதவுவதாக அறியப்படுகிறது. இந்த பொருட்கள் கறிகளில் சேர்க்கப்படலாம் அல்லது மூலிகை டீகளாக உட்கொள்ளலாம்.

6. பாகற்காய்: கசப்பான சுவை இருந்தபோதிலும், பாகற்காய் மேம்பட்ட இன்சுலின் உணர்திறன் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது. ஸ்டிர்-ஃப்ரைஸ் அல்லது ஸ்டஃப் செய்யப்பட்ட உணவுகள் போன்ற பல்வேறு வடிவங்களில் இதை சமைக்கலாம்.

7. நட்ஸ்: பாதாம், அக்ரூட் பருப்புகள் மற்றும் பிஸ்தா ஆகியவற்றில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிரம்பியுள்ளன. மிதமாக உட்கொள்ளும் போது அவை இரத்த சர்க்கரை அளவுகளில் குறைந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

நீரிழிவு நோயாளிகள் தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முயற்சிப்பதால், இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் அவர்களின் உணவு தேர்வுகளின் தாக்கத்தை கருத்தில் கொள்வது அவசியம். அதேபோல், இரத்த சர்க்கரை அளவை திறம்பட நிர்வகிக்கும் அதே வேளையில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுக்கலாம். மேலும், ஒருவரின் உணவில் கணிசமான மாற்றங்களைச் செய்வதற்கு முன், ஒரு சுகாதார நிபுணர் அல்லது பதிவுசெய்யப்பட்ட உணவியல் நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. 

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

From weight loss to cancer prevention.. So many benefits of cilantro?

எடை குறைப்பு முதல் புற்றுநோய் தடுப்பு வரை.. கொத்தவரங்காயில் இத்தனை நன்மைகளா?

கொத்தவரங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

கொத்தவரங்காய் என்பது மிகவும் பிரபலமான காய்கறிகளில் ஒன்றாகும். ஆனால் நம்மில் பலருக்கும் கொத்தவரங்காய் பிடிக்காது. அதில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொண்டால் இனி வேண்டாம் என்று சொல்ல மாட்டீர்கள். கொத்தவரங்காயில் நார்ச்சத்து, புரதம் மற்றும் தாதுக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது. மேலும் கலோரியும் றைவாக உள்ளது. இது தவிர வைட்டமின் சி, கால்சியம், மெக்னீசியம், இரும்பு, பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்களும் உள்ளன, அவை பல ஆரோக்கிய நன்மைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. கொத்தவரங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

இதய ஆரோக்கியம்: கொத்தவரங்காயில் நார்ச்சத்து அதிகமாகவும் மற்றும் நிறைவுற்ற கொழுப்பு குறைவாக உள்ளது. கொழுப்பைக் குறைக்க அல்லது இதய ஆரோக்கியத்தை பராமரிக்க முயற்சிக்கும் மக்களுக்கு இது சிறந்த உணவாக அமைகிறது. இதில் உள்ள நார்ச்சத்து கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது, பொட்டாசியம் இரத்த அழுத்த அளவைக் குறைக்க உதவுகிறது.

இரத்தச் சர்க்கரைக் கட்டுப்பாடு: கொத்தவரங்காயில் உள்ள நார்ச்சத்து, ரத்த ஓட்டத்தில் சர்க்கரையை உறிஞ்சுகிறது. இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், உணவுக்குப் பிறகு இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கவும் உதவும்.

செரிமான ஆரோக்கியம்: கொத்தவரங்காயில் உள்ள நார்ச்சத்து, சீரான தன்மையை மேம்படுத்தவும் பொதுவாக செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இது மலச்சிக்கல் மற்றும் பிற செரிமான பிரச்சனைகளையும் குறைக்க உதவும்.

எடை மேலாண்மை: கொத்தவரங்காயில் கலோரிகள் குறைவாக உள்ளது, ஆனால் அதிக நார்ச்சத்து உள்ளது, இது உடல் எடையை குறைக்க உதவும். ஆரோக்கியமான எடையை பராமரிக்க முயற்சிப்பவர்களுக்கு சிறந்த உணவாக அமைகிறது. நார்ச்சத்து பசி உணர்வை கட்டுப்படுத்துகிறது. எனவே நீங்கள் அதிகமாக சாப்பிட வேண்டாம், மேலும் இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை சீராக்க உதவுகிறது, இதனால் நீங்கள் கொழுப்பை கரைக்க உதவும்.

புற்றுநோய் தடுப்பு: கொத்தவரங்காயில் பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன, அவை பெருங்குடல் புற்றுநோய் போன்ற சில வகையான புற்றுநோய்களின் குறைக்க உதவும். புரோஸ்டேட் புற்றுநோய் உட்பட மற்ற வகை புற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கவும் இது உதவும்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

5 benefits of drinking dry grape soaked water

உலர் திராட்சை ஊற வைத்த நீரை குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் 5 நன்மைகள்

உலகிலேயே அதிக ஊட்டச்சத்து நிறைந்த பழங்களில் ஒன்று உலர் திராட்சை. இதனை கிஸ்மிஸ் பழம், முந்திரிப் பழம் என பல பெயர்களிலும் அழைப்பார்கள். நாம் வழக்கமாக சக்கரைப் பொங்கலுக்கு பயன்படுத்துவோமே, அதே பழம்தான். இந்தப் பழத்தை சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. அதனால்தன் பலரும் இதை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுகிறார்கள்.

ஊற வைத்த உலர் திராட்சையில் விட்டமின், மினரல், நார்ச்சத்து என நம் உடலை பல வழிகளிலும் மேம்படுத்தக் கூடிய பல வகையான ஊட்டச்சத்துகள் உள்ளது. இதற்கு முன் இதை சாப்பிடாமல் இருந்தீர்கள் என்றால், இனி உங்கள் டயட்டில் உலர் திராட்சை சேர்த்துக் கொண்டு, அதை தண்ணீரில் ஊற வைத்து, அந்த நீரை தினசரி குடியுங்கள். உலர் திராட்சை ஊறை வைத்த நீரை குடிப்பதால் நம் உடலுக்கு கிடைக்கும் 5 நன்மைகள் இதோ...

புளித்த ஏப்பங்களையும் பிற வயிற்று பிரச்சனைகளையும் தடுக்கிறது : உலர் திராட்சை நீரை குடிப்பதால் பல வயிற்று பிரச்சனைகளை சரி செய்யலாம். இதில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், நமது குடலின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு குடலில் உள்ள பாக்டீரியாக்களையும் கட்டுப்படுத்துகிறது. ஆகவே தினமும் உலர் திராட்சை ஊற வைத்த நீரை குடிப்பது உங்கள் செரிமான அமைப்பிற்கு மிகவும் நல்லது.

உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது : உலர் திராட்சை ஊற வைத்த நீரை குடிப்பதால், நம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றி ரத்தத்தை தூய்மைபடுத்துகிறது. குறைந்தது ஒரு வாரம் இந்த நீரை குடித்தால், இதய நோய் வரும் ஆபத்து குறையும். அதோடு உங்கள் கல்லீரலையும் சுத்தபடுத்தி அதன் செயல்பாட்டை அதிகரிக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் : உலர் திராட்சை ஊற வைத்த நீரில் அதிகளவு அண்டி ஆக்ஸிடெண்ட் இருப்பதால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, பல நோய்களிலிருந்து உங்களை காக்கிறது. அதோடு உங்களின் செரிமான ஆரோக்கியத்தையும் பலப்படுத்துகிறது.

முடி உதிர்வை தடுக்கிறது : முடி உதிர்வை எப்படி தடுப்பது என பலரும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். உலர் திராட்சை இருக்கும்போது ஏன் கவலைப்படுகிறீர்கள். உலர் திரட்சை ஊற வைத்த நீரை குடிக்கும் போது, நம் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக முடி உதிர்வு தடுக்கப்படுகிறது.

தூக்கமின்மை பிரச்சனையை போக்குகிறது : இன்றைய காலத்தில் பலரும் தூக்கமின்மையால் பெரிதும் அவதிப்படுகிறார்கள். தினமும் உலர் திராட்சை ஊற வைத்த நீரை குடிக்கும் போது, இதிலிருக்கும் தூக்கத்தை தூண்டும் ஹார்மோனான மெலடோனின் காரணமாக தூக்கமின்மை பிரச்சனையை தடுத்து உங்களுக்கு நல்ல தூகத்தை வரவழைக்கிறது

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

No more ordinary payasam.. Try making a brilliant roja keer

இனி சாதாரண பாயசம் வேண்டாம்.. அட்டகாசமான ரோஜா கீர் செய்து பாருங்க

இனிப்புகள் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். இனிப்பு உருண்டைகள், மிட்டாய்கள், லட்டு, மைசூர் பாக், ஜிலேபி என்று எதனை வகைகள் இருந்தாலும் விருந்து முடித்து குடிக்கும் பயத்தம் போன்ற ஒரு ருசிவராது. அப்படி அனைவரும் விரும்பி குடிக்கும் பாயசத்தில் ஒரு வித்தியாசமான ரெஸிபியைத் தான் இப்பொது உங்களுக்கு சொல்ல இருக்கிறோம்.

பொதுவாக ஜவ்வரிசி, சேமியா, அவல், பாலடை போட்டு பாயசம் செய்து பார்த்திருப்போம். ஆனால் பூ வைத்து பாயசம் செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா? ஆமாம் மக்களே மல்லிகை , ரோஜா, போன்ற பூக்களை வைத்து சுவையான வடஇந்திய ஸ்டைல் கீர் செய்வதை பற்றி தான் சொல்லப்போகிறோம்.

தேவையான பொருட்கள்

  • 2 டீஸ்பூன் அரிசி
  • 1 1/2 லிட்டர் முழு கிரீம் பால்
  • சர்க்கரை-சுவைக்க
  • 2 டீஸ்பூன் நறுக்கிய கொட்டைகள்
  • 1 தேக்கரண்டி ஏலக்காய் தூள்
  • 2 டீஸ்பூன் உலர் ரோஜா இதழ்
  • ரோஜா இதழ் (அலங்காரத்திற்காக)

கீர் செய்வது எப்படி?

அரிசியைக் கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும். இப்போது, ​​ஒரு அகலமான கடாயில் பாலை சூடாக்கி, கொதிக்க விடவும். அதே நேரம் சிறிய கடாயில் அரிசியை மிதமான தீயில் வைத்து மணம் வரும் வரை வறுத்து கொதிக்கும் பாலில் சேர்க்கவும். அரிசியை பாலில் போட்டு குழையும் வரை வேக விடவும்.

 

இதற்கு இடையில் அரிசி பாதிக்கு மேல் வெந்ததும், நறுக்கிய காய்ந்த ரோஜா இதழ்கள் மற்றும் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.அரிசி முழுவதுமாக வெந்ததும், அதில் வெல்லம் அல்லது சக்கரையை பொடியாக்கி சேர்த்து நன்றாக கிளறவும் . ஓரளவு கெட்டியானதும் அடுப்பை அணைத்து அதை ஆறவிடவும்.

ஆடிய பின்னர் பிரிட்ஜில் வைத்து கூட பரிமாறலாம். பரிமாறும்போது பிரெஷான   ரோஜா இதழ்களை சிறிதாக வெட்டி கீரோடு கலந்து அதன் மீள் நறுக்கி வைத்துஇருக்கும் முந்திரி திராச்சை, பதம் தூவி சாப்பிட்டு பாருங்கள், மற்ற பாயசம் எல்லாம் தோற்றுவிடும்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
உலக தலை மற்றும் கழுத்து புற்றுநோய் தினம்: கவனிக்க வேண்டிய அறிகுறிகள் இங்கே

HNC க்கு வரும்போது, முன்கூட்டியே கண்டறிதல் முக்கியமானது. (ஆதாரம்: ஃப்ரீபிக்)

2014 ஆம் ஆண்டு சர்வதேச தலை மற்றும் கழுத்து புற்றுநோயியல் சங்கத்தால் அறிவிக்கப்பட்ட பின்னர், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 27 அன்று உலக தலை மற்றும் கழுத்து புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. .

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 6,60,000 க்கும் மேற்பட்ட புதிய வழக்குகள் மற்றும் 3,25,000 இறப்புகள் தலை மற்றும் கழுத்து புற்றுநோயால் (HNC) பிரிட்டிஷ் பல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி. மேலும், தலை மற்றும் கழுத்து புற்றுநோய் உலகளவில் ஏழாவது பொதுவான புற்றுநோயாகும்.

HNC க்கு வரும்போது, முன்கூட்டியே கண்டறிதல் முக்கியமானது. கவனிக்க வேண்டிய அறிகுறிகள் மற்றும் அறிகுறிகளைப் பற்றிய அதிக விழிப்புணர்வுடன், இந்த நிகழ்வுகளில் சில தடுக்கக்கூடியவை. எனவே, இந்த வகை புற்றுநோயைத் தடுக்க ஒருவர் எடுக்கக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் புரிந்துகொள்ள நிபுணர்களிடம் திரும்பினோம்.

காரணங்கள் மற்றும் அறிகுறிகள்

டாக்டர் தேஜிந்தர் கட்டாரியா, ரேடியேஷன் ஆன்காலஜி, கேன்சர் இன்ஸ்டிட்யூட், மேதாந்தா, குருகிராம் தலைவர், HNC கள் முக்கியமாக வாய், அண்ணம் மற்றும் குரல்வளை மற்றும் குரல்வளையின் பல்வேறு பகுதிகளில் இருந்து எழும் செதிள் உயிரணு புற்றுநோய்களாகும்.

நொய்டாவில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையின் அறுவைசிகிச்சை புற்றுநோயியல் மூத்த ஆலோசகர் டாக்டர் ஷுபம் கார்க், இந்தியாவில் புகையிலையின் பரவலான பயன்பாடு காரணமாக HNC வழக்குகள் அதிகரித்து வருவதாக விளக்கினார். "இந்த புகையிலை புகைபிடித்த அல்லது புகைபிடிக்காத புகையிலை வடிவத்தில் இருக்கலாம். புகையிலையின் புகைபிடித்த வடிவங்களில் பீடி, சிகரெட் அல்லது புக்கா ஆகியவை அடங்கும், அதே சமயம் புகையற்ற புகையிலையில் கான், ஜர்தா அல்லது பான் மசாலா போன்ற மெல்லப்பட்ட புகையிலை அடங்கும். இந்த இரண்டு வடிவங்களும் வெவ்வேறு வகையான தலை மற்றும் கழுத்து புற்றுநோய்களுக்கு வழிவகுக்கும்.

கூர்மையான பற்கள், மோசமான பல் சுகாதாரம், மசாலாப் பொருட்களின் அதிக பயன்பாடு மற்றும் அதிகப்படியான ஆல்கஹால் ஆகியவை மற்ற காரணங்களாகும் என்று அவர் கூறினார்.

டாக்டர் கட்டாரியாவின் கூற்றுப்படி, குணமடையாத புண் அல்லது உதடுகள், நாக்கு, கன்னங்களின் உள் மேற்பரப்பு, அண்ணத்தின் மேல், டான்சில்ஸ் மீது வீக்கம், உணவை விழுங்குவதில் சிரமம், குரல் கரகரப்பு அல்லது வலியற்ற இரத்தப்போக்கு ஆகியவை HNC களின் பொதுவான அறிகுறிகளாகும். மூக்கு அல்லது வாய்.

சிகிச்சை மற்றும் தடுப்பு

விளம்பரம்

புகையிலை மற்றும் ஆல்கஹால் காரணமாக HNC ஐ உருவாக்கும் நோயாளிகள் இரண்டாம் நிலை புற்றுநோய்களை உருவாக்கும் அபாயத்தில் உள்ளனர். (ஆதாரம்: ஃப்ரீபிக்)

வாயில் ஏதேனும் அசாதாரணம் இருந்தால், உடனடியாக ஒரு பல் மருத்துவர் அல்லது மருத்துவரை அணுக வேண்டும் என்று டாக்டர் கார்க் குறிப்பிட்டார், இதனால் ஆரம்ப கட்டங்களில் சிகிச்சை சிறப்பாக செய்யப்படுவதால், நோயை விரைவில் கண்டறிய முடியும்.

"முக்கிய சிகிச்சையானது அறுவைசிகிச்சை ஆகும், அங்கு குறைந்தபட்சம் 0.5 செ.மீ அளவுள்ள சாதாரண திசுக்களின் பரந்த விளிம்புகளுடன் பாதிக்கப்பட்ட பகுதி அகற்றப்படுகிறது. இது கழுத்தின் நிணநீர் முனைகளை அகற்றும் ஒரு கழுத்து துண்டிப்புடன் சேர்ந்துள்ளது. இருப்பினும், குறைபாடு போதுமானதாக இருந்தால், அழகு மற்றும் செயல்பாட்டை உறுதிப்படுத்த போதுமான மறுசீரமைப்பு தேவைப்படும், ”என்று அவர் கூறினார், பாதிக்கப்பட்ட பகுதி மிகப் பெரியதாக இருந்தால் மற்றும் அகற்ற முடியாவிட்டால், பெரும்பாலான நோயாளிகளுக்கு கீமோதெரபியுடன் பிந்தைய கதிர்வீச்சு தேவைப்படும். .

இதற்கிடையில், இந்த புற்றுநோயைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம். "நல்ல ஓரோ-பல் சுகாதாரத்தை பராமரிப்பதன் மூலமும், நாள்பட்ட எரிச்சலை ஏற்படுத்தும் புகையிலை, வெற்றிலை பாக்கு, சுண்ணாம்பு மற்றும் ஆல்கஹால் போன்றவற்றைத் தவிர்ப்பதன் மூலமும் மட்டுமே தடுப்பு சாத்தியமாகும்" என்று டாக்டர் கட்டாரியா கூறினார்.

புகையிலை மற்றும் ஆல்கஹால் காரணமாக HNC ஐ உருவாக்கும் நோயாளிகள், பொருள் துஷ்பிரயோகத்தை நிறுத்திய பின்னரும், மேற்பரப்பு சளி மாற்றங்களால் இரண்டாம் நிலை புற்றுநோய்களை உருவாக்கும் அபாயத்தில் உள்ளனர்.

"இரண்டாம் நிலை புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுப்பதற்கான சிறந்த வழி, தூண்டும் பொருட்களின் பயன்பாட்டை நிறுத்துவதும், சிகிச்சை அளிக்கும் மருத்துவருடன் நெருக்கமான பின்தொடர்தலுடன் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வதும் ஆகும்" என்று அவர் முடித்தார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
ஆடை இல்லாமல் தூங்குவது நல்லதா கெட்டதா? நன்மை என்ன? தீமை என்ன...

இரவில் ஆடை அணியாமல் நிர்வாணமாகத் தூங்கும்போது உடலில் நிறைய ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு ஆரோக்கிய நன்மைகள் உண்டாகும்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
பழங்களில் குறைந்த கிளைசெமிக் கொண்ட பழங்கள் என்னென்ன... சர்க்கரை நோயாளிகள் எதையெல்லாம் சாப்பிடலாம்...

சர்க்கரை நோயாளிகளுக்கான குறைந்த சர்க்கரை பழங்கள் : நீரிழிவு நோயாளிகள் மழைக்காலங்களில் தங்களுடைய உணவுகளைத் தேர்வு செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்....

விரிவாக படிக்க >>
Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 2 of 30 )   NEXT |  LAST